சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை உறுதி செய்யும் விதமாக அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை உறுதி செய்யும் விதமாக அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில், இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையில் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்தலாம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளஸ்டிக் ( Bio Degradable plastic) இதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில், இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையில் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்தலாம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளஸ்டிக் ( Bio Degradable plastic) இதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.