தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும்: கோவையில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேச்சு

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடைபெறும் உலக தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. வேளாண் பல்கலை, உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மாநில திட்டக்குழு இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 



இந்த மாநாட்டில், அண்ணா பல்கலை.,யின் முன்னாள் துணை வேந்தர் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழை இணையத்துடன் இணைக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின்றன. இந்த கட்டுரைகளை தமிழ் இணையத்துடன் இணைத்தால் அது தமிழ் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும். கடந்த 1980-ம் ஆண்டு முதல் இதற்காக செயலாற்றி வருகிறோம்.

தமிழ் மொழிக்கான பிரத்தியேக தேடுதளம் ஒன்றை அமைக்கும் போது, விக்கிப்பீடியாவில் தமிழ் முதல் மூன்று மொழிகளில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அவர்கள் வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர்கள் என்று மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் பேசுகையில், "தற்போது பல்வேறு மென்பொருள் கட்டுமான நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மென்பொருட்களில் தமிழ் மொழியினை நிறுவதல் தொடர்பான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த பின் கட்டாயமாக தமிழ் இணைய பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பார்கள்." என்றார். 



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...