வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தடை

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான வன ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு பங்களாக்கள் மற்றும் வன ஓய்வறைகள் சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி. லோக்பூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் :- வனப்பகுதிகளில் உள்ள அரசு ஓய்வறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது. மேலும், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் தங்கி, ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு வன ஓய்வறைகள் மற்றும் பங்களாக்களை உயர்த்திக் கட்டுவது போன்றவை உச்சநீதிமன்றம் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் இருக்கும் இந்த அறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும், வனப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படவிருக்கும் வசதிகளை மத்திய அதிகாரக்குழு பராமரிக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...