சூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து கோவையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., கைது

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.



கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணி, சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.



மேலும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., கார்த்திக் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...