கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சம வேலைக்கு சம ஊதியம், பொது விநியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வருதல், எடை குறைவில்லாமல் பொருட்களை பொட்டலம் மூலம் வழங்க நடவடிக்கை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அரசு இதனை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வரும் 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம், பொது விநியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வருதல், எடை குறைவில்லாமல் பொருட்களை பொட்டலம் மூலம் வழங்க நடவடிக்கை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அரசு இதனை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வரும் 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
