நிலம் கையகப்படுத்தத் தடையில்லை : 8 வழிச்சாலை திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்

சென்னை: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ,இதனிடையே, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.க., சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி ராஜா, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலையின் நோக்கம் தெரியாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கக் கூடாது. இந்த திட்டத்தால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, கிராமங்கள் பெரு நகரங்களுடன் இணைக்கப்படும். தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும்.இந்த சாலை குறித்த நான் பலரிடம் கருத்து கேட்டதில் அனைவரும் பாராட்டினர். ஒருசிலர் மட்டும் இந்த சாலையை தரை மார்க்கமாக இல்லாமல் உயர்மட்டத்தில் அமைக்கலாம் என கருத்து தெரிவித்தனர். எனவே, 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்", இவ்வாறு அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...