தொழில் நிறுவனங்கள் மானிய வசதிகளை பயன்படுத்த திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு

திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தொழில் துறை நலிவடைந்துவிட்டதாக பல்வேறு தொழில் துறையினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, "நலிவடைந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் சிறு குறு அல்லது பெரிய நிறுவனங்கள் இணைந்து குழுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளை அணுகும் போது, மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் என மொத்தம் 80 சதவிகித மானியம் அளிக்கின்றன.

அதற்கான முயற்சியினை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் செய்து வருகிறது. மேலும், பருத்தி விலையேற்றம் என்பது பருத்தி கழகத்தின் தவறான ஏற்றுமதி கொள்கையால் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதியினை கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...