'மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும்'

திருப்பூர்: மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

திருப்பூர்: மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார். 

திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:-

பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அங்கு ஆட்கடத்தல் 66.6% குறைந்துள்ளது, கொலை குற்றம் 23 சதவீதம் குறைந்துள்ளது, மக்களின் வாழ்க்கை தரம் கூடியுள்ளது. 

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் புரண மது விலக்கு கொள்கை தான்.

தமிழ்நாடு அரசு கள்ளுக்கு விதித்திருந்த தடையை நீக்கி விட்டது என்கிற குற்றசாட்டை எதிர்கட்சிகள், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக தெரிவித்தால் அதை தமிழ்நாடு கள் இயக்கம் முன்னின்று முறியடிக்கும்.

கள் போதை பொருள் அல்ல அது உணவு என்பதை நிலை நிறுத்தும், எடப்பாடி அரசுக்கு சவால் விடும் வகையில் வரும் ஜனவரி 21-ந் தேதி நான்கு முறையாக அசுவமேத யாகம் நடத்தப்படும். 

அந்த யாகத்தை அரசு தரப்போ, அரசியல் தரப்போ யார் தடுத்து நிறுத்தினாலும் விவாதம் நடத்தப்படும்.

அதில், கள் ஒரு போதை பொருள் என நிரூபிக்கப்பட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும்.

கடந்த கால கசப்பான நிகழ்வின் காரணமாக விவசாயிகள் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலங்கள் கொடுக்க முன்வரவில்லை.

குறிப்பாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்கவில்லை.

 ஏக்கர் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் இழப்பீடு கொடுத்துள்ளார்கள், 

பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்கள்.

 இவ்வாறன முறை கேட்டினால் தான் இன்று நிலம் கொடுக்க மறுப்பதற்கு முதன்மை காரணமாக இருக்கின்றது.

திருப்பூர் அருகே காங்கேயம் பகுதியில் உள்ள இரும்பு தாது எடுக்கும் திட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...