கூட்ட நெரிசலை குறைக்க சென்னை-எர்ணாகுளம் வரை சிறப்பு ரயில்கள்

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் (Train No.06005 ) ஆகஸ்ட் 3 மற்றும் 31-ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

இதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (Train No.06007 ) ஆகஸ்ட் 7, 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

சென்னை-எர்ணாகுளம் செல்லும் ரயில் திருப்பூர், கோவை மார்க்கமாக கேரளா செல்கிறது. 

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வாயிலாக நாகர்கோவிலை அடைகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...