தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும்- சி.ஐ.டி.யு.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

 

அரசு போக்குவரத்து சங்க ஊழியர் மாநாடு உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சட்டசபையில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான மானிய கோரிக்கையில் முறையான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தவோ அல்லது தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றாத வகையில் மானிய கோரிக்கை அறிவிப்புகள் உள்ளது. 

பேருந்துகள்

தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கி வரும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது. அதை மாற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு அதனை செய்யாமல் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு ஏற்கனவே கொண்டு வந்த இதுபோன்ற திட்டம் வெற்றி அடையவில்லை. இதில், அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கூட்டம் கூட்டி போராட்டம் அறிவிப்பு வெளியிட உள்ளோம். நடத்துனர் இல்லா பேருந்து அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்.

நடத்துனர் இல்லா பேருந்து

சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து இயக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்டார் வாகன சட்டப்படி நடத்துனர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது. 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக அரசே அறிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில் வேலை வாய்ப்பினை உருவாக்க தொழிற்சாலைகள் உருவாக்கி வேலை வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

கட்டண உயர்வால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பட்ஜெட்டில் 10 ஆயிரம் பேருந்துகளுக்கான தொகையை ஒதுக்கினால் தான் பேருந்து சேவை சிறப்பாக இருக்கும்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...