சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது போலீசார் இந்தச் சட்டத்தை முதலில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதையும், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இருசக்கர வாகனங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே எல்.இ.டி விளக்குகள் பொருத்துவதை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக அவ்வப்போது முறையான வாகன சோதனை நடத்தவும், அது குறித்த அறிக்கையை வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது போலீசார் இந்தச் சட்டத்தை முதலில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதையும், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இருசக்கர வாகனங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே எல்.இ.டி விளக்குகள் பொருத்துவதை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக அவ்வப்போது முறையான வாகன சோதனை நடத்தவும், அது குறித்த அறிக்கையை வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.