சூயஸ் ஒப்பந்த தகவல்களை வெளியிட வேண்டி கோவையில் தர்ணா: முன்னாள் மாமன்ற உறுப்பினர் கைது

கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.

கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.



அப்போது செய்தியாளர்களிடம் பத்மநாபன் கூறுகையில், "இத்திட்டத்திற்காக கடந்த ஜனவரி மாதம் தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆறு மாதம் ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

அந்த தனியார் நிறுவனம் மட்டுமே அவர்களது இணையதளத்தில் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டனர். எனவே சுயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல், வேலைக்கான உத்தரவு நகல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஆகியவற்றை உடனடியாக வெளியிடுமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இன்று மாலை அல்லது நாளை ஒப்பந்த நகல் வெளியிடப்படும் என்று உதாசீனமாக பதில் கூறுகிறார்.

இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்." என்றார்.



இதனை தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் பத்மநாபனை உக்கடம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...