’ஜியோ ஜிகா ஃபைபர்’ என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம்

மும்பை: ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது :-

நாட்டில் அதிகம் வரி செலுத்தும் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, 215 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இணைய பயன்பாடு 125 கோடி ஜி.பி.,யிலிருந்து 240 கோடி ஜி.பி.,யாக அதிகரித்துள்ளது, என்றார்.

இதைத் தொடர்ந்து, ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை அம்பானி தொடங்கி வைத்தார். மேலும், ஜியோ போன் பாகம் 2-ஐயும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சேவை குறித்து விளக்கி அம்பானி பேசினார். மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள 1,100 நகரங்களில் முதற்கட்டமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும். ஃபைபர் இணைப்பு மூலம் வீடுகள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ப்ராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், இந்த ஃபைபர் இணைப்பின் மூலம் தொலைக்காட்சிகளில் இருந்தே வீடியோ கால்களை செய்யலாம். 

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஜியோ ஃபோனில் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் சேவை கிடைக்கும். வாய்ஸ் கமண்ட் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபர் சேவையைப் பெற ஜியோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...