கோவை: கோவையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து மடியேந்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை: கோவையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து மடியேந்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப்படி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இச்சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து மடியேந்தும் போராட்டத்தை நடத்தினர்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப்படி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இச்சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து மடியேந்தும் போராட்டத்தை நடத்தினர்.