கோவை: ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் போது மோதல் ஏற்பட்டது தொடர்பாக, இயக்குநர் அமீர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரி அமீர், கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜூலை 9-ம் தேதிக்குள் இருநபர் உத்திரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இயக்குநர் அமீர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், குமரேசன், தனபால் ஆகிய இருவர் நீதிபதி கண்ணன் முன்னிலையில் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்திரவாதம் அளித்தனர்.
இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் பேசுகையில், "ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. அப்படிப் பார்த்தால், தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகள் ஆவார்கள்.
சேலத்தில் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க போராடுபவர்களை ஒடுக்குவது அதிகாரவர்க்கத்தின் பாசிச போக்கை காட்டுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது. ஆனால், இவையெல்லாம் மக்களின் போராடும் சிந்தனையை மட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி தான்," என அவர் தெரிவித்தார்.
கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் போது மோதல் ஏற்பட்டது தொடர்பாக, இயக்குநர் அமீர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரி அமீர், கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜூலை 9-ம் தேதிக்குள் இருநபர் உத்திரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இயக்குநர் அமீர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், குமரேசன், தனபால் ஆகிய இருவர் நீதிபதி கண்ணன் முன்னிலையில் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்திரவாதம் அளித்தனர்.
இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் பேசுகையில், "ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. அப்படிப் பார்த்தால், தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகள் ஆவார்கள்.
சேலத்தில் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க போராடுபவர்களை ஒடுக்குவது அதிகாரவர்க்கத்தின் பாசிச போக்கை காட்டுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது. ஆனால், இவையெல்லாம் மக்களின் போராடும் சிந்தனையை மட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி தான்," என அவர் தெரிவித்தார்.