உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு பயங்கரவாத முத்திரை: மத்திய அரசு மீது இயக்குநர் அமீர் கடும் தாக்கு

கோவை: ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் போது மோதல் ஏற்பட்டது தொடர்பாக, இயக்குநர் அமீர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரி அமீர், கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜூலை 9-ம் தேதிக்குள் இருநபர் உத்திரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் அமீர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், குமரேசன், தனபால் ஆகிய இருவர் நீதிபதி கண்ணன் முன்னிலையில் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்திரவாதம் அளித்தனர்.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் பேசுகையில், "ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. அப்படிப் பார்த்தால், தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகள் ஆவார்கள்.

சேலத்தில் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க போராடுபவர்களை ஒடுக்குவது அதிகாரவர்க்கத்தின் பாசிச போக்கை காட்டுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது. ஆனால், இவையெல்லாம் மக்களின் போராடும் சிந்தனையை மட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி தான்," என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...