கோவை: 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர்.
கோவை: 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், ஆர்.ஜி. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க., மண்டல தலைவர் ஆதிநாராயணுடன் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, கடந்த 2016 மே மாதம் ஆதிநாராயணன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை அடுத்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது வெரைட்டிஹால் சாலையில் அடிதடி வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்காக ஆஜரான வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரிடம், வழக்கு தொடர்பான விபரம் தெரியுமா என நீதிபதி இனியா கருணாகரன் கேட்டார். இதற்கு தங்கள் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளதாக அவர்கள் பதிலளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், ஆர்.ஜி. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க., மண்டல தலைவர் ஆதிநாராயணுடன் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, கடந்த 2016 மே மாதம் ஆதிநாராயணன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை அடுத்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது வெரைட்டிஹால் சாலையில் அடிதடி வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்காக ஆஜரான வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரிடம், வழக்கு தொடர்பான விபரம் தெரியுமா என நீதிபதி இனியா கருணாகரன் கேட்டார். இதற்கு தங்கள் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளதாக அவர்கள் பதிலளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.