கோவை: பா.ஜ.க ஆட்சியில், எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை: பா.ஜ.க ஆட்சியில், எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகள் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நெல், சோளம், கம்பு,சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயிப்பதில்லை என்றும் தனி அமைப்பே நிர்ணயம் செய்வதாககூறினார்.
மேலும், எந்த துறையிலும் சல்லி காசு கூட ஊழல் செய்யாத அரசாக, மத்திய பாஜக அரசு உள்ளதாக கூறிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டதாக தூத்துக்குடி மக்களே சொல்லி வரும் நிலையில், பயங்கரவாத்தை அடக்க காவல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செயல்பாடு குறித்து யூகத்தின் அடிப்படையில் பேசியதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.