பா.ஜ.க ஆட்சியில் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை: பா.ஜ.க ஆட்சியில், எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: பா.ஜ.க ஆட்சியில், எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகள் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நெல், சோளம், கம்பு,சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயிப்பதில்லை என்றும் தனி அமைப்பே நிர்ணயம் செய்வதாககூறினார்.

மேலும், எந்த துறையிலும் சல்லி காசு கூட ஊழல் செய்யாத அரசாக, மத்திய பாஜக அரசு உள்ளதாக கூறிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டதாக தூத்துக்குடி மக்களே சொல்லி வரும் நிலையில், பயங்கரவாத்தை அடக்க காவல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செயல்பாடு குறித்து யூகத்தின் அடிப்படையில் பேசியதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...