கோவை: டெல்லி அரசில் ஆளுநருக்கு தனித்துவமான அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோவை: டெல்லி அரசில் ஆளுநருக்கு தனித்துவமான அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. அதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது, எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், இந்த நாட்டிற்கும் என்ன தேவையோ, அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. பேரறிஞர் அண்ணா ஆளுநர் பதவி தேவையா என்று கேட்டுள்ளார். ஆளுநருக்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டால் பிரச்சினை இல்லை. ஆளுநரின் ஆய்வைப் பற்றி குறை ஏதும் சொல்லவில்லை," என்றார்.
டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. அதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது, எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், இந்த நாட்டிற்கும் என்ன தேவையோ, அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. பேரறிஞர் அண்ணா ஆளுநர் பதவி தேவையா என்று கேட்டுள்ளார். ஆளுநருக்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டால் பிரச்சினை இல்லை. ஆளுநரின் ஆய்வைப் பற்றி குறை ஏதும் சொல்லவில்லை," என்றார்.