'ஸ்ரீ அன்னபூர்ணா' ஹோட்டல் பெயரில் போலி வணிகம்: திருப்பூரில் புகார்

கோவை: ‘திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற பெயரில், திருப்பூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் நிறுவனத்தின் சார்பில் திருப்பூர் மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை: ‘திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற பெயரில், திருப்பூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் நிறுவனத்தின் சார்பில் திருப்பூர் மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவில், ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் ஓட்டல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஜெகன் எஸ் தாமோதரசாமி கடந்த மாதம் 25-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

கடந்த 1960-ம் ஆண்டு முதல் ஹோட்டல் வணிகம் செய்து வருகிறோம். ‘ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற டிரேட் மார்க், நிறுவனர் டாக்டர் கே. தாமோதரசாமி நாயுடு அவர்கள் ஏற்படுத்தி, பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், ‘திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற பெயரில், வெங்கடேஷ் தீனதயாளன் மற்றும் வசந்தி தீனதயாளன் ஆகியோர் எங்களது பதிவு பெற்ற பெயரான 'ஸ்ரீ அன்னபூர்ணா' என்பதை தவறாக பயன்டுத்தி திருப்பூரில், ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இது டிரேட்மார்க் உரிமையை மீறிய செயலாகும். 

டிரேட் மார்க்கை பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டபோதும், மறுத்து விட்டனர். சட்டப்பூர்வமாக தடுத்த நிறுத்த நீதிமன்றத்தை அணுகியபோதும் இதுவரை நிறுத்தவில்லை.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களது மனநிலைக்கும், கவுரத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது, வாடிக்கையாளர்களையும் பெருமளவில் பாதித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பலர், திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலையும், எங்கள் நிறுவனம் என்று நம்பும் நிலை ஏற்படும். எனவே, ஸ்ரீ அன்னபூர்ணா பெயரில் தீனதயாளன் மற்றும் வசந்தி தீனதயாளன் பொருட்களை விற்று, வணிகம் செய்வதை தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.







Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...