கோவை: சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை: சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணியை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணி கொண்டு வந்த உருளை வடிவ உலோகம் ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட அந்த உலோகத்தை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமல்ராஜை கைது செய்தனர்.
இந்நிலையில், அந்த உருளையை ஆய்வு செய்த போது, அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்திவரப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அமல்ராஜை கைது செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று அமல்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் எனவும், அது 3.6 கிலோ எடையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.