கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ராஜவீதி, டவுன்ஹால், காந்திபார்க் போன்ற பகுதிகளில் உள்ள குடோன்களில் மற்றும் பெரிய கடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், பொன்னையராஜபுரம் பகுதியில் கடந்த 2-ம் தேதி குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குடோனை சோதனை செய்தனர். அப்போது இரண்டு டன் குட்கா பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயன்றதாக குடோன் உரிமையாளர் அசோக் மற்றும் அவரது கூட்டாளிகள் காசிவிசுவநாதன், சலீம், அஸ்ரப், சுரேஷ் மற்றும் பாபு ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.