மும்பையில் அடுத்த ஆண்டு சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி : திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு

திருப்பூர் : மும்பையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : மும்பையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

திருப்பூரில் இண்டியா இட்மா சொசைட்டி சார்பில் ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு அந்த அமைப்பின் தலைவர் ஹரிகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர்கள் கூறியதாவது :- ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஜவுளி தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான வணிக தளத்தையும், தீர்வையும் ஊக்குவிக்கும் கண்காட்சியாக 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி வரும் ஜனவரி 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பாம்பே கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இதில், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஆப்பிரிக்க ஜவுளித்தொழில் மேம்பாடு மற்றும் இந்திய ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தீர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆப்பிரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வர்த்தகத்திற்கான சந்திப்பாக அமைய உள்ள 2-வது சர்வதேச கண்காட்சியில் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, கானா, தென்னாப்பிரிக்கா, தன்சானியா, தெற்கு சூடான் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

இந்தக் கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழில்துறையினருக்கு கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு சர்வதேச ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்துகொண்டு, சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...