திருப்பூர் : மும்பையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : மும்பையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் இண்டியா இட்மா சொசைட்டி சார்பில் ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு அந்த அமைப்பின் தலைவர் ஹரிகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர்கள் கூறியதாவது :- ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஜவுளி தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான வணிக தளத்தையும், தீர்வையும் ஊக்குவிக்கும் கண்காட்சியாக 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி வரும் ஜனவரி 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பாம்பே கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஆப்பிரிக்க ஜவுளித்தொழில் மேம்பாடு மற்றும் இந்திய ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தீர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆப்பிரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வர்த்தகத்திற்கான சந்திப்பாக அமைய உள்ள 2-வது சர்வதேச கண்காட்சியில் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, கானா, தென்னாப்பிரிக்கா, தன்சானியா, தெற்கு சூடான் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழில்துறையினருக்கு கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு சர்வதேச ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்துகொண்டு, சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூரில் இண்டியா இட்மா சொசைட்டி சார்பில் ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு அந்த அமைப்பின் தலைவர் ஹரிகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர்கள் கூறியதாவது :- ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஜவுளி தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான வணிக தளத்தையும், தீர்வையும் ஊக்குவிக்கும் கண்காட்சியாக 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி வரும் ஜனவரி 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பாம்பே கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஆப்பிரிக்க ஜவுளித்தொழில் மேம்பாடு மற்றும் இந்திய ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தீர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆப்பிரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வர்த்தகத்திற்கான சந்திப்பாக அமைய உள்ள 2-வது சர்வதேச கண்காட்சியில் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, கானா, தென்னாப்பிரிக்கா, தன்சானியா, தெற்கு சூடான் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழில்துறையினருக்கு கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு சர்வதேச ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்துகொண்டு, சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.