கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன.
கடந்த புதன்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள 61 ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலப்படம் செய்யப்பட்ட 50 கிலோ டீத்தூள், 15 லிட்டர் பால் மற்றும் 30 கிலோ எடையுள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 3.6 லிட்டர் அளவுள்ள குளிர் பானங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் வழக்கமான சோதனைதான் இது. ஆவின் பாலகங்களில் ரூ. 5-க்கு டீ விற்பனை செய்வதால், அது எவ்வாறு சாத்தியம் என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 61 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன," என்றார்.
