கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014-ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.
இந்த நிலையில், கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.
அப்போது வங்கி அதிகாரி, "பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் தவறுதலாக உங்களுக்கு வந்திருக்கும்." என்று கூறினார்.
பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014-ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.
இந்த நிலையில், கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.
அப்போது வங்கி அதிகாரி, "பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் தவறுதலாக உங்களுக்கு வந்திருக்கும்." என்று கூறினார்.
பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.