கோவை பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்:தவறுதலாக அனுப்பியதா மத்திய அரசு?

கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014-ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.

அப்போது வங்கி அதிகாரி, "பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் தவறுதலாக உங்களுக்கு வந்திருக்கும்." என்று கூறினார்.

பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...