குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் குழப்பங்கள் ஏற்படும் : கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கோவை: குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் எதிர்காலத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை: குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் எதிர்காலத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:- 

கோவை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் குறித்த ஒப்பந்தம் குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை மாநில அரசோ, மாநகராட்சி நிர்வாகமோ வெளியிடவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தத்தை முழுமையாக வெளியிட வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும். எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கானாலை இந்த நிறுவனம் கட்டியதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூயஸ் என்பது பன்னாட்டு நிறுவனம் என்பதாலும், தற்போதே வெளிப்படைத்தன்மை இல்லை என்பதாலும் எதிர்காலத்தில் இத்திட்டத்தில் குழப்பம் ஏற்படும். எனவே, இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...