திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.
திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.
திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி சார்பில் ஜவுளித் தொழிலில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்த புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க மையத்தின் இயக்குனர் இறையன்பு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய அவர், "வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைஞர்கள் வர்த்தகத்தில் வெற்றி பெறலாம். தோல்வி என்பதே இருக்காது. ஆதலால் இளைஞர்கள் வித்தியாசமான சிந்தனைகளை வளர்க்க வேண்டும்." என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.