சேலத்தில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சேலம்: சேலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

சேலம்: சேலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

சேலத்தில் கடந்த இரு தினங்களாக பேய் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகர் முழுவதும் தண்ணீரில் நிரம்பி வழிகின்றன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முகமது ஆசாத் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வீடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக ஓடையில் சிறுவன் தவறி விழுந்தான். ஓடையில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், சிறுவன் ஆசாத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.



இதைத் தொடர்ந்து, இன்று காலை கருவாட்டுப் பாலம் அருகே குப்பைகளை அகற்றும் போது, சிறுவன் முகமது ஆசாத் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர், இது குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சிறுவன் முகமது ஆசாத்தின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...