சேலம்: சேலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.
சேலம்: சேலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.
சேலத்தில் கடந்த இரு தினங்களாக பேய் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகர் முழுவதும் தண்ணீரில் நிரம்பி வழிகின்றன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முகமது ஆசாத் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வீடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக ஓடையில் சிறுவன் தவறி விழுந்தான். ஓடையில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், சிறுவன் ஆசாத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை கருவாட்டுப் பாலம் அருகே குப்பைகளை அகற்றும் போது, சிறுவன் முகமது ஆசாத் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர், இது குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சிறுவன் முகமது ஆசாத்தின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.

சேலத்தில் கடந்த இரு தினங்களாக பேய் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகர் முழுவதும் தண்ணீரில் நிரம்பி வழிகின்றன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முகமது ஆசாத் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வீடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக ஓடையில் சிறுவன் தவறி விழுந்தான். ஓடையில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், சிறுவன் ஆசாத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை கருவாட்டுப் பாலம் அருகே குப்பைகளை அகற்றும் போது, சிறுவன் முகமது ஆசாத் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர், இது குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சிறுவன் முகமது ஆசாத்தின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.
