அண்ணா தொழிற்சங்க பதவியில் இருந்து வேண்டுமென்றே நீக்கம்: முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றச்சாட்டு

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கப் பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி. இவர், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அண்ணா தொழிற்சங்க சட்டவிதிகளின்படி தனக்கு முறையாக எந்தவிதமான விளக்கமும் அறிக்கைகள் வழங்கவில்லை. என்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மேலும், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனில், முறையாக சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யாமல் விடுவித்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதே பதவியில் என்னைப் பணியமர்த்தினார். ஆனால், இவர்கள் நான் உறுப்பினராக இல்லை என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு தொழிற்சங்க உறுப்பினர் அல்லாத ஒருவர், எப்படி அந்தப் பதவியில் இருக்க முடியும். அதனால், இவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. மேலும், கடந்த முறை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, நான் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு ரூ. 4,000 வாங்கிக் கொண்டிருந்தவர்களை ரூ. 12,000 வரை உயர்த்தினேன். எனவே, தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர்.

மேலும், நான் தொழிற்சங்க வங்கி கணக்கில் ரூ. 12 மற்றும் ரூ. 18 கோடி வரை சேர்த்து வைத்துள்ளேன். இவர்களால், தொழிற்சங்கத்தை நடத்த முடியாது. எனவே, எண்ணெய் வேண்டுமென்றே அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். நான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், அந்தப் பொறுப்பிற்கு மற்றவர்களை இவர்களால் நியமிக்க முடியாது. எனவேதான், இவர்கள் ஒரு குழு அமைத்து உள்ளனர். நிச்சயமாக அந்த வழக்கு எனக்கு சாதகமாக வரும். தொழிற்சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனர். 

தற்போது, டி.டி.வி., தினகரன் அணியில் எனக்கு மீண்டும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதற்கு, டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...