ரேஷன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

ஏழைகளுக்கான மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை, வாங்கும் வசதிபடைத்தவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தொடர்ந்து 3 மாதங்கள் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பியிருந்த நிலையில், ரேஷன் அட்டைகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் அவை ரத்து செய்யப்படமாட்டாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கூறியது அறிவுரை தான் எனவும், கொள்கை முடிவு இல்லை என சட்டப்பேரவையில் அவர் விளக்கம் அளித்தார்.

ஏழைகளுக்கான மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை, வாங்கும் வசதிபடைத்தவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தொடர்ந்து 3 மாதங்கள் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பியிருந்த நிலையில், ரேஷன் அட்டைகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் அவை ரத்து செய்யப்படமாட்டாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கூறியது அறிவுரை தான் எனவும், கொள்கை முடிவு இல்லை என சட்டப்பேரவையில் அவர் விளக்கம் அளித்தார்.