தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு பணிகள் பாதிப்பு

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதித்தை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்குதல், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடுதல், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுதல் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் 228 கிராம பஞ்சாயத்துக்கள், 12 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதனால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...