கோவை: குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிஷார். இவர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் நிஷாரை கைது செய்வதற்காக நேற்று அவரது வீட்டுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், நிஷாரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்களும், நண்பர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கூடுதல் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிஷாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.