கோவை : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது.
கோவை : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது.
45-வது ஸ்குவாட்ரான் படைப்பிரிவில் முக்கிய பங்காற்றி வரும் தேஜஸ் போர் விமானம் சேவை, இனி அதன் சொந்த தளமான (home base) சூலூர் படை தளத்தில் இருந்து மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், தெற்கு விமானப் படையின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்., பதவுரியா கலந்து கொண்டார்.

இதுவரை திருவனந்தபுரத்தை தெற்கு விமானப்படை தளம் தலைமையிடமாகக் கொண்டு போர்விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சூலூர் விமானப்படை தளத்தின் அயராத முயற்சியால் போர்விமானங்களின் சேவையை மீண்டும் தன்வசம் பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
45-வது ஸ்குவாட்ரான் படைப்பிரிவில் முக்கிய பங்காற்றி வரும் தேஜஸ் போர் விமானம் சேவை, இனி அதன் சொந்த தளமான (home base) சூலூர் படை தளத்தில் இருந்து மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், தெற்கு விமானப் படையின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்., பதவுரியா கலந்து கொண்டார்.

இதுவரை திருவனந்தபுரத்தை தெற்கு விமானப்படை தளம் தலைமையிடமாகக் கொண்டு போர்விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சூலூர் விமானப்படை தளத்தின் அயராத முயற்சியால் போர்விமானங்களின் சேவையை மீண்டும் தன்வசம் பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.