துடும்பு, பறை இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி போராட்டம்

கோவை : துடும்பு, பறை உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி, கோவையில் இசைக் கருவிகளை இசைத்து சமூக நீதிக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கோவை : துடும்பு, பறை உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி, கோவையில் இசைக் கருவிகளை இசைத்து சமூக நீதிக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.



சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியின் சார்பில் துடும்பு, பறை, கொம்பு, மோளம் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது, துடும்பு, இசை உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்தும், நடனமாடியும் போராட்டம் நடத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை. கர்நாடகா இசை கலைஞர்கள் மற்றும் திரையுலகினர்களுக்கு வழங்கப்படுவது போல துடும்பு, பறை இசை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.



மேலும், இசை கலைஞர்களுக்கு விருது வழங்க தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுமென்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...