கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 48-வது நிறுவன நாள் விழா மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழா இன்று நடைபெற்றது.
கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 48-வது நிறுவன நாள் விழா மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பெ. சாந்தி, பண்ணை பட்டயப் படிப்பு குறித்து விளக்கினார். மூன்று வருடப் படிப்பானது 6 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 561 விவசாயிகள் மற்றும் பயனாளிகள் இப்பட்டத்தைப் பெற்றுள்ளனர். சிறப்பு முகவுரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. ராமசாமி 1863-ல் சைதாப்பேட்டையில் விவசாயப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து நினைவு கூர்ந்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குநர் ஜெனரல் அழகுசுந்தரம், 220-க்கும் மேற்பட்ட வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, பருவகால மாற்றத்தால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பிற்கு தீர்வு காண வேண்டும் என விஞ்ஞானிகளைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற சேவையாற்றிய 8 அலுவலகப் பணியாளர்கள், 20 மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக திறம்பட பணியாற்றிய ஓட்டுநர்கள் கௌரவிக்கப்பட்டனர். 229 வேளாண் பண்ணை இளநிலை தொழில்நுட்பப் பட்டப் படிப்பு பயின்றவர்களுக்குப் பட்டங்களும் வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர், சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பெ. சாந்தி, பண்ணை பட்டயப் படிப்பு குறித்து விளக்கினார். மூன்று வருடப் படிப்பானது 6 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 561 விவசாயிகள் மற்றும் பயனாளிகள் இப்பட்டத்தைப் பெற்றுள்ளனர். சிறப்பு முகவுரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. ராமசாமி 1863-ல் சைதாப்பேட்டையில் விவசாயப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து நினைவு கூர்ந்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குநர் ஜெனரல் அழகுசுந்தரம், 220-க்கும் மேற்பட்ட வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, பருவகால மாற்றத்தால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பிற்கு தீர்வு காண வேண்டும் என விஞ்ஞானிகளைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற சேவையாற்றிய 8 அலுவலகப் பணியாளர்கள், 20 மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக திறம்பட பணியாற்றிய ஓட்டுநர்கள் கௌரவிக்கப்பட்டனர். 229 வேளாண் பண்ணை இளநிலை தொழில்நுட்பப் பட்டப் படிப்பு பயின்றவர்களுக்குப் பட்டங்களும் வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர், சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.