திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.
மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் (தனி), அவிநாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம் என எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 2,324 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் வாக்குசாவடிகளை தணிக்கை செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்து பகுதி வாரியாக வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
அதில் 157 வாக்குச் சாவடிகள் புதிதாகவும் 40 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டும் 50 வாக்குச் சாவடிகள் பெயரும் மாற்றப்பட்டு 2,481 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வெளியிட்டார்.
இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், இந்த பட்டியலில் ஆட்சேபம் உள்ள பட்சத்தில் வரும் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் (தனி), அவிநாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம் என எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 2,324 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் வாக்குசாவடிகளை தணிக்கை செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்து பகுதி வாரியாக வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
அதில் 157 வாக்குச் சாவடிகள் புதிதாகவும் 40 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டும் 50 வாக்குச் சாவடிகள் பெயரும் மாற்றப்பட்டு 2,481 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வெளியிட்டார்.
இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், இந்த பட்டியலில் ஆட்சேபம் உள்ள பட்சத்தில் வரும் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.