கோவை: மாங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் காட்டெருமை ஒன்று உயிரிழந்தது.
கோவை: மாங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் காட்டெருமை ஒன்று உயிரிழந்தது.

மாங்கரையை அடுத்த செம்புக்கரை பகுதியில் பத்து வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று பலியானதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர்.
அப்போது அங்கு தாழ்வாக இருந்த மின் கம்பி காட்டெருமை மீது பட்டதில் அது உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், அந்த விலங்கின் உடல் உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த மின் கம்பத்தை மாற்றி, வேறு மின்கம்பம் நிறுவப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாங்கரையை அடுத்த செம்புக்கரை பகுதியில் பத்து வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று பலியானதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர்.
அப்போது அங்கு தாழ்வாக இருந்த மின் கம்பி காட்டெருமை மீது பட்டதில் அது உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், அந்த விலங்கின் உடல் உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த மின் கம்பத்தை மாற்றி, வேறு மின்கம்பம் நிறுவப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.