சுகாதார சீர்கேட்டில் ஜி.என்.மில்ஸ்-சக்தி நகர்

கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள சக்தி நகரில் முறையாக குப்பைகள் தூர்வாரபடததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள சக்தி நகரில் முறையாக குப்பைகள் தூர்வாரபடததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



சக்தி நகரில் சுமார் 70 வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பை அள்ளப்படுவதே இல்லை என்றும் தெருவிளக்கு வசதி மிக மோசமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து அங்கு வசிக்கும் விவேக் என்பவர் கூறுகையில், "குடியிருப்புகள் தற்போது அதிகமாகி வருவதால் வாரம் இருமுறை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை எடுக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை செய்வதில்லை. நிரம்பி வழியும் குப்பைத் தொட்டியால் சாலை முழுவதும் குப்பைகூளமாக காட்சியளிக்கிறது.



அதே போல், இங்கு உள்ள தெருவிளக்கும் எரிவது இல்லை. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...