கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள சக்தி நகரில் முறையாக குப்பைகள் தூர்வாரபடததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள சக்தி நகரில் முறையாக குப்பைகள் தூர்வாரபடததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சக்தி நகரில் சுமார் 70 வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பை அள்ளப்படுவதே இல்லை என்றும் தெருவிளக்கு வசதி மிக மோசமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் விவேக் என்பவர் கூறுகையில், "குடியிருப்புகள் தற்போது அதிகமாகி வருவதால் வாரம் இருமுறை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை எடுக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை செய்வதில்லை. நிரம்பி வழியும் குப்பைத் தொட்டியால் சாலை முழுவதும் குப்பைகூளமாக காட்சியளிக்கிறது.

அதே போல், இங்கு உள்ள தெருவிளக்கும் எரிவது இல்லை. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை." என்றார்.

சக்தி நகரில் சுமார் 70 வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பை அள்ளப்படுவதே இல்லை என்றும் தெருவிளக்கு வசதி மிக மோசமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் விவேக் என்பவர் கூறுகையில், "குடியிருப்புகள் தற்போது அதிகமாகி வருவதால் வாரம் இருமுறை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை எடுக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை செய்வதில்லை. நிரம்பி வழியும் குப்பைத் தொட்டியால் சாலை முழுவதும் குப்பைகூளமாக காட்சியளிக்கிறது.

அதே போல், இங்கு உள்ள தெருவிளக்கும் எரிவது இல்லை. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை." என்றார்.