அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு: நீலகிரி ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு

நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் ஆதிவாசி காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 11.04.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் 300.8 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தச் சான்றின் அடிப்படையில் மேற்படி இடத்தைக் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பின், நேற்று வீடு கட்டுவதற்கான அஸ்திவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது, தனியார் எஸ்டேட் ஊழியர்கள், தங்களது முதலாளியிடம் கேட்காமல் எந்த வேலையும் செய்ய கூடாது எனக் கூறி, 2 காவலர்களுடன் வந்து வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மீறி வீடு கட்டினால் ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர். 

மேலும், அஸ்திவாரத்திற்காக தோண்டிய குழிகளை மூடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். எனவே, அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி இனமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்று அளித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...