மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீரகேளம் நாகராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை எண்:1645 துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக் கடை உரிமையாளர் மற்றும் அடியாட்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:- மதுபானக்கூட உரிமம் பெற்ற பழம்பதி என்பவர் இந்த மதுபானக் கூடத்தை சுப்ரமணி என்பவருக்கு உள் வாடைக்கு விட்டுள்ளார். கடையை நடத்தி வரும் சுப்ரமணி சட்டத்திற்கு புறம்பாக இரவு, பகல் பாராமல் மது வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், இதனைத் தட்டிக் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்களை அடியாட்கள் மூலம் தாக்குகின்றனர்.

கடந்த மாதம் 30-ம் தேதியன்று துணை விற்பனையாளர் மீது பழம்பதியின் சகோதரர் தாக்குதல் நடத்தியதில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கடையின் துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். மதுபானக்கூட உரிமதாரரின் காப்புத் தொகையை பறிமுதல் செய்வதுடன், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...