என்ஜின் கோளாறால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதியில் நிறுத்தம்: காரின் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்

நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.



நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.

நீலகிரி மலை ரயில் தினமும் மதியம் 3.30 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும். இந்நிலையில், நேற்று மதியம் குன்னூரிலிருந்து புறப்பட்ட மலை ரயில் காட்டேரி பகுதிக்கு அருகே சென்ற போது, அங்குள்ள பாலத்தில் என்ஜின் பழுதாகி நின்றது.

உடனடியகாக ரயில்வே ஊழியர்கள் குன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், பழுதை சரி செய்ய கால தாமதமானதால், ரயில்வே நிர்வாகம் உடனடியாக பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதனால், ரயிலில் பயணித்த 165 பயணிகள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு மூன்று பேருந்துகளில் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணி பயணிக்கு கார் ஏற்பாடு செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பப்பட்டார். மேலும், தற்காலிகமாக பழுது சரி செய்யப்பட்டு, அந்த ரயில் இரவு 7 மணியளவில் காட்டேரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டது.

தற்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...