கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பியதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து 1014.81 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாக 29.28 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.
ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விரைவில் முழுவதுமாக நிரம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையைப் பொறுத்தவரையில் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அணைகள் நிரம்பியுள்ள காரணத்தால் மேற்குமண்டலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமான நீர் இருப்பதால், இந்த ஆண்டு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து 1014.81 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாக 29.28 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.
ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விரைவில் முழுவதுமாக நிரம்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையைப் பொறுத்தவரையில் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அணைகள் நிரம்பியுள்ள காரணத்தால் மேற்குமண்டலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமான நீர் இருப்பதால், இந்த ஆண்டு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.