கோவை: காரமடை அருகே விஷம் குடித்து கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: காரமடை அருகே விஷம் குடித்து கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு விஷாலினி (10) என்ற மகள் உள்ளார். பிரசன்னா காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (47) என்பவருக்குச் சொந்தமான குடிநீர் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

மேலும், தனது குடும்பத்துடன் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் வசித்து வந்தார். அவருக்கு பக்கவாத நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரசன்னாவும் அவரது மனைவியும் நேற்று இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காரமடை காவல் ஆய்வாளர் சக்திவேல், உதவி ஆய்வாளர் பொன்ராஜ், தனிப்பிரிவு தலைமை காவலர் சரவணன் ஆகியோர் சம்பவ உயிரிழந்த பிரசன்னாவின் உடலை மீட்டனர்.
மேலும், உயிருக்குப் போராடிய அவரது மனைவியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் விஷம் குடித்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு விஷாலினி (10) என்ற மகள் உள்ளார். பிரசன்னா காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (47) என்பவருக்குச் சொந்தமான குடிநீர் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

மேலும், தனது குடும்பத்துடன் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் வசித்து வந்தார். அவருக்கு பக்கவாத நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரசன்னாவும் அவரது மனைவியும் நேற்று இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காரமடை காவல் ஆய்வாளர் சக்திவேல், உதவி ஆய்வாளர் பொன்ராஜ், தனிப்பிரிவு தலைமை காவலர் சரவணன் ஆகியோர் சம்பவ உயிரிழந்த பிரசன்னாவின் உடலை மீட்டனர்.
மேலும், உயிருக்குப் போராடிய அவரது மனைவியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் விஷம் குடித்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.