கோவை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை குறிச்சி பகுதியில் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை குறிச்சி பகுதியில் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறிச்சி, போத்தனூர் போன்ற பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போத்தனூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக சஞ்சய் காந்தி, சிவ சந்திரன், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் கைதான மூன்று பேரிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம், நான்கு லேப்டாப்கள் மற்றும் ஐந்து செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குறிச்சி, போத்தனூர் போன்ற பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போத்தனூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக சஞ்சய் காந்தி, சிவ சந்திரன், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் கைதான மூன்று பேரிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம், நான்கு லேப்டாப்கள் மற்றும் ஐந்து செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.