கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: சுக்ரவார்பேட்டை மில் சாலையில் உள்ள மகாதேவ் ஹார்டுவேர்ஸில் கொள்ளையடித்த நபரை ரயில் நிலையம் முன்பு வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மரக்கடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவருக்கு சொந்தமான மகாதேவ் ஹார்டுவேர் என்ற கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹார்டுவேர் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் முன்னிலையில் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) சோமசுந்தரம் தலைமையில் ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அவர்களது குழுவினர் இணைந்து சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை நேற்று கோவை ரயில் நிலையம் முன்பு வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து களவுபோன ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மரக்கடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவாராம் என்பவருக்கு சொந்தமான மகாதேவ் ஹார்டுவேர் என்ற கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹார்டுவேர் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் முன்னிலையில் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு) சோமசுந்தரம் தலைமையில் ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் அவர்களது குழுவினர் இணைந்து சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சந்தேகிக்கப்பட்ட ஹிம்தாரம் என்பவரை நேற்று கோவை ரயில் நிலையம் முன்பு வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து களவுபோன ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.