இன்று தேசிய ஜி.எஸ்.டி. தினம்: வரிவிதிப்பால் முடங்கிப் போன பின்னலாடை நகரம்

திருப்பூர்: தேசிய அளவில் இன்று ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 30 சதவீத தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு,குறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


திருப்பூர்: தேசிய அளவில் இன்று ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 30 சதவீத தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. இதற்கு, தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புக்கள் கிளம்பினாலும், காலப்போக்கில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக இந்த வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5% இருந்து அதிகபட்சமாக 28% வரைக்கும் ஜி.எஸ்.டி. வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஜுலை 1-ம் தேதி தேசிய ஜி.எஸ்.டி., தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்தது, அதன்படி, இன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் பல்வேறு மாநிலங்கள் பயனடைந்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பின்னலாடை நகரமான திருப்பூரை பொறுத்தவரை மிகவும் வருந்தத்தக்க ஒன்று என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து சிஸ்மா (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது :- ஜி.எஸ்.டி.,யை வரும் போது பசு மாதிரி பால் தரும் என்று தான் நினைத்து வரவேற்றோம். பின்னர், தான் அது புலி போல் பாய்ந்து அடிக்கக்கூடிய ஒரு செயல் என்று தெரிந்தது. ரூ. 500, ரூ. 1,000 என சிறு, குறு தொழில் நிறுவனங்களில் வர்த்தகம் நடைபெறும். அதற்கும் கூட ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு என்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் புதிய முதலீட்டாளர்களின் வரவு முற்றிலும் குறைந்துள்ளது. புதிய முதலீட்டாளர்களின் வருகை இல்லை எனவும் கூறலாம்.



மேலும், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் வங்கிகளில் பெறக்கூடிய சலுகைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, உள்ள சூழ்நிலையில் வருமானம் இல்லை என்றாலும், போட்ட கொள்முதல் கீழே போகக்கூடாது என்ற போராட்ட நிலைக்கு வந்து விட்டோம். அரசாங்கம் வேண்டுமானால் மார்தட்டிக் கொள்ளட்டும் நாங்கள் தொழில் துறையினருக்கு நன்மை தான் செய்கின்றோம் என்று, ஆனால், அரசைப் பொறுத்தவரையில் தவறான கொள்கை முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு குழு அமைத்து ஜி.எஸ்.டி.,யால் ஏற்படும் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.



மேலும், ஜி.எஸ்.டி.,யால் பின்னலாடை நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி நம்பிக்கையை இழந்து விட்டோம். ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்களுக்கும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே வரிவிகிதம் என்பது வருந்தத்தக்கச் செயலாகும். எங்களைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி., என்பது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஜி.எஸ்.டி.,யால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளோம், இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...