உடல்நலக் குறைவால் கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டியார் காலமானார்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் தனது சகோதரர் சண்முகத்துடன் தோட்டத்து விட்டில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி வசித்து வந்தார். இவர், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது.

இவரது உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று மாலை 7 மணியளவில் அவரது இல்லத்திற்கு அருகே நடைபெறுகிறது. இதனையடுத்து, கோவை தெற்கு மாவட்டம் உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தி.மு.க.,வினர் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டனர். இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், கலை இலக்கிய பேரவை உமாபதி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் உட்பட தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று உறவினரிடம் துக்கம் விசாரித்தனர்.

காட்டம்பட்டி கந்தசாமி, 1989-1991 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1972 -1977 வரை மாநிலக் கூட்டுறவு வங்கி இயக்குநராகப் பதவி வகித்துள்ளார். மேலும், சிறு வயது முதலே தி.மு.க.,வின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு 1960-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழப் பிரச்சினை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...