திருப்பூர்: திருப்பூரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் வாகனங்கள் மூலம் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்: திருப்பூரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் வாகனங்கள் மூலம் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கணபதி நகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2014-ம் ஆண்டு, 45 சென்ட் நிலத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க அப்போதைய பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், பொழுதுபோக்கு பூங்காவில் ஏராளமான மரங்களும், நடைபயிற்சிக்கென நடைபாதையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் மூலம் பல்லடம் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி குவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பூங்கா வளாகத்தில் உடற்பயிற்சிக்கூடக் கட்டிடத்தில் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டியதாகவும் தெரிகிறது. இதனால், மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும், காற்று மாசு, சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடியிருப்புவாசிகளுக்கு பலவித நோய்பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறிவந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பல்லடம் நகராட்சி அதிகாரிகள் பூங்காவிற்கு சென்று குப்பை கொட்டும் பணியை மேற்பார்வையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணபதி நகர் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனையடுத்து, அதிகாரிகளும் வாகனத்தில் ஏறி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கணபதி நகர் மக்கள் கூறுகையில்," குடியிருப்பு நடுவில் குப்பைக் கொட்டும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் உடனே கைவிட வேண்டும். குப்பைகளை அகற்றிப் பொழுதுபோக்கு பூங்காவாக மக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கணபதி நகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2014-ம் ஆண்டு, 45 சென்ட் நிலத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க அப்போதைய பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், பொழுதுபோக்கு பூங்காவில் ஏராளமான மரங்களும், நடைபயிற்சிக்கென நடைபாதையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் மூலம் பல்லடம் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி குவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பூங்கா வளாகத்தில் உடற்பயிற்சிக்கூடக் கட்டிடத்தில் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டியதாகவும் தெரிகிறது. இதனால், மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும், காற்று மாசு, சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடியிருப்புவாசிகளுக்கு பலவித நோய்பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறிவந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பல்லடம் நகராட்சி அதிகாரிகள் பூங்காவிற்கு சென்று குப்பை கொட்டும் பணியை மேற்பார்வையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணபதி நகர் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனையடுத்து, அதிகாரிகளும் வாகனத்தில் ஏறி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கணபதி நகர் மக்கள் கூறுகையில்," குடியிருப்பு நடுவில் குப்பைக் கொட்டும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் உடனே கைவிட வேண்டும். குப்பைகளை அகற்றிப் பொழுதுபோக்கு பூங்காவாக மக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.