நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் தீவிர மழைப் பொழிவைப் பெறும். இந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரமாக நீடித்த கனமழையால் உதகை நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் தீவிர மழைப் பொழிவைப் பெறும். இந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரமாக நீடித்த கனமழையால் உதகை நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
