உதகையில் கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் தீவிர மழைப் பொழிவைப் பெறும். இந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரமாக நீடித்த கனமழையால் உதகை நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...