நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள், தங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் எனக் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில மாநில அரசுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தில் அங்கீகாரம் அளித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், அரசின் பல்வேறுத் துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, தமிழகத்தில், காவல்துறையில் பிரித்திகா யாஷினி, நஸ்ரியா உள்ளிட்ட திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 



இந்த நிலையில், இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா(36) பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், இன்று முறைப்படி பதவியேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக எனக்கு ஏராளமானோர் உதவியுள்ளனர். நிறையக் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த, உதவி செய்த அனைவருக்கும் நன்றி. 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இன்று நீதித்துறையில் நான் சேர்த்துள்ளேன். அனைத்துத் துறையிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும். எனது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்னாலான உதவியை செய்வேன்" என்றார். 

11 ஆண்டுகளுக்கு முன்னதாக, வழக்கறிஞராக தகுதி பெற்றிருந்தும், திருநங்கைகளுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் பதவியேற்க மாட்டேன் எனக் கூறி அதனைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...