கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 5-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையில் மருத்துவமனை வசதிகள் போதுமான அளவில் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு கைதி மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். மடத்துக்குளம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சிறைச்சாலையில் ஒருவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டால் போதுமான மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் வந்த பின்புதான் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடியும். ஆனால், சிறைத்துறையின் இந்த காலதாமதத்தால் தான் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 5-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையில் மருத்துவமனை வசதிகள் போதுமான அளவில் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு கைதி மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். மடத்துக்குளம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சிறைச்சாலையில் ஒருவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டால் போதுமான மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் வந்த பின்புதான் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடியும். ஆனால், சிறைத்துறையின் இந்த காலதாமதத்தால் தான் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.