கோவை மத்திய சிறையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: கைதி மாரடைப்பால் மரணம்

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 5-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையில் மருத்துவமனை வசதிகள் போதுமான அளவில் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு கைதி மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். மடத்துக்குளம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சிறைச்சாலையில் ஒருவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டால் போதுமான மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் வந்த பின்புதான் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடியும். ஆனால், சிறைத்துறையின் இந்த காலதாமதத்தால் தான் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...